எஸ்பொ
May 25, 2010'எஸ்பொ' என்று அழைக்கப்படும் எஸ்.
பொன்னுத்துரை (1932, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில்
ஒருவர். அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி
பயின்றார். நைஜீரியாவில்ஆங்கிலத்துறைத் தலைவராகப்
பணிபுரிந்தவர். ஈழத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச்
செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத்
தொடக்கினார். 1990 முதல் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயே
வாழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலியாவில் சிறிது
காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச மாசிகையின் கௌரவ ஆசிரியராக
விளங்கியவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர்
எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார்.மற்றும் Ngũgĩ wa Thiong'o என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep
Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்று
மொழிபெயர்த்துள்ளார். இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய 'இனி ஒரு விதி செய்வோம்'
என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் "வரலாற்றில்
வாழ்தல்" என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல்
வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவரது
நூல்கள்
Posted by spo


























